பதிவர் சந்திப்பு முன்னோட்ட அழைப்பு
பல வெளியூர்களில் சந்திப்பு நடப்பதை பார்த்துவிட்டு நாமும் அதைப்போல ஒர் சந்திப்பு ஏற்படத்தாலாம்என நானும் வால்பையனும் பேசிக்கொண்டோம்.
ஆனால் ஈரோட்டில் விரல் விட்டு எண்ணக்ககூடிய அளவுக்குகூட பதிவர்கள்
இருப்பதாக தெரியவில்லை.
ஆகவே, ஈரோடு மாவட்ட அளவில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமா?
எனக்கேட்டார். அதுவும் நல்ல யோசனை எனக்கூறி இவ்வழைப்பை பதிவிடுகிறேன்.
ஈரோடு மாவட்டத்தின் பதிவுலக தங்கங்களே தங்களின் மேலான ஆதரவை பின்னுட்டத்தில் இட்டு தங்களின் வருகையை தெரிவியுங்கள்...
வர இயலாதவர்களும் பின்னுட்டமிட்டு தங்களின் இருப்பையாவது தெரிவுங்கள்.
பதிவிடாத வாசகர்களும் கலந்துகொள்ளாலாம். படிக்கமட்டும் நேரம் உள்ள வாசகர்கள் அதிகம் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
தினம் நேரம் ஆகியவைகளை கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம்.
இதில் நாமக்கல் மாவட்டத்தையும் இணைத்துக்கொள்ளாலமா?
யோசனை தெரிவியுங்கள்