Saturday, May 31, 2008

ஆடாதேடா ஆடாதேடா மனிதா !!! நீ வெறும் தூசிதானடா !!!

மனிதனின் ஆட்டம் எல்லாம் அவன் வீடு வீதியோடு சரி அவனை நம் பூமியோடு ஒப்பிட்டால் அவன் ஒன்றுமே இல்லை.....

சரி பூமியை மற்ற நமது அருகில் உள்ள சக சகோதர கிரகங்களோடு ஒப்பிடுவோமா....

கீழே உள்ள படத்தை பாருங்கள்.....




செவ்வாய், வெள்ளி, புதன் மற்றும் புளூட்டோ(இது தூர கிரகம்) விடம் ஒப்பிடும் போது நமது பூமி கில்லிதான். 

ஆனால் நமது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களோடும் ஒப்பிடும்போது ?

கீழ் உள்ள படத்தை பாருங்கள்




வியாழன், சனியோடு ஒப்பிடும் போது கால்பந்து அளவில் இருந்தால் நமது பூமி ஒரு இலந்தைப் பழம் அளவுதான். 

சரி இப்போது வியாழன் மற்றும் சனியின் கதியை நமது சூரியனின் அளவோடு ஒப்பிட்டு பார்ப்போமா?

கீழே உள்ள படத்தை கிளிக்குங்கள்




இப்போது சூரியன் கால்பந்தைவிட சற்று பெரிதெனில் நமது வியாழனின் நிலை இலந்தபழத்தை விட சிறிது... 

நமது பூமியின் நிலமை வெறும் கடுகு அளவே !!!!

சரி அடுத்து நமது சூரியனாரின் கதியை பார்ப்போம்...

கீழே உள்ள படத்தை பாருங்கள்




நமது சூரியனாருக்கு ஏற்பட்ட நிலமை அவர் இப்போது கடுகாகிவிட்டார். 

நமது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகமான் வியாழன் சுமார் ஒரு pixel அளவு ஆகிவிட்டார்

நமது பூமியின் நிலமை கண்ணுக்கு தெரியாத சூழ்நிலை

ARCTURUS என்ற நட்சத்திரத்தோடு ஒப்பிடுகையில்.....

சரி அடுத்து ARCTURUS நட்சத்திரத்தின் நிலைதான் என்னவென்று பார்ப்போமா?

அடுத்த படத்தை பாருங்கள்



இப்போது ARCTURUS யின் நிலமை கடுகளவு... நமது சூரியனோ ஒரு pixel அளவு

இதில் வியாழனே கண்ணுக்கு தெரியாத சூழ்நிலை....பூமியின் நிலை ?

மனிதா தேவையா? இந்த ஆட்டம்?? இதில் ஆத்திகமே பெரிது நாத்திகமே பெரிது என போட்டி வேறு

மனிதாபிமானத்தை வளர்த்து நல் மனிதர்களாய் வாழ்வோமே.....

Friday, May 30, 2008

குமாரபாளையம் மாணவி மாநிலத்தில் முதலிடம்

குமாரபாளையம் மாணவி மாநிலத்தில் முதலிடம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் S.S.M.லட்சுமியம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி  மெட்ரிகுலேசன் தேர்வில் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார்.

அவர் குமாரபாளையம் பிரபல மருத்துவர்கள் வாசுதேவன் - குகப்பிர்யா தம்பதியனரின் மகள் ஆவார்.

அவருக்கு தாளாளர் K.S. இளவரசன் மற்றும் தலைமையாசிரியர் சம்பத்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

மற்றும் பள்ளிவளாகத்தில் 10000 வாலா வெடி வைத்துக்கொண்டாடினர்.

மேற்படி பள்ளி பலவருடங்களாக SSLC தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுவருகிறது என்பது குறிப்படத்தக்கது.

இதே குமாரபாளையத்தில் தான் நான் குடியிருந்து வருகிறேன்

Thursday, May 22, 2008

பெட்ரோல் டீசல் விலை உயரக்கூடும்

பெட்ரோலிய பொருட்களான பெட்ரோல், டிசல், கேஸ் ஆகியவை விரைவில் விலை கூடக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன।

குருடு ஆயில் விலை $ நூறு டாலர் ஒரு பேரலுக்கு இருந்த போதுதான் நமது நாட்டில் விலை உயர்த்தப்பட்டது। ஆனால் தற்போது அது பேரலுக்கு நூற்றி முப்பது தாண்டி நூற்றிமுப்பத்தியாறு டாலரை தொட்டுவிட்டது।

இது சுமார் ३० சதவீத விலையேற்றமாகும்।

ஆனால் நமது அரசு மவுனம் காத்துவருவதற்க்கு காரணம் கர்நாடக மாநிலதேர்தலும் சில மாநிலங்களில் இன்று நடை பெறும் இடைத்தேர்தலுமே ஆகும்।

அனேகமாக இன்றுவாக்கு பதிவு முடிந்தவுடன் அதிகரிப்பு அறிவிப்பு வெளியாகலாம்

கீழே இருக்கும் செய்தி தொகுப்பையும் படித்து விடுங்கள்

சென்னை: காய்கறி விலை மிகக் கடுமையாக உயர்ந்திருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்।அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது। இதுவரை எந்தப் பொருளின் விலையும் குறைந்ததாகத் தெரியவில்லை।சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை மகா உயரத்தில் இருக்கும் நிலையில் தற்போது காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது.காய்கறிகளின் விலையும் மிகப் பயங்கரமாக உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.அதிகபட்சமாக பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 45 வரை விற்கப்படுகிறது. கேரட் கிலோ ரூ. 26க்கு விற்கிறது. கத்திரிக்காய் கெட்ட கேட்டுக்கு கிலோ ரூ. 18 வரை விற்கப்படுகிறது.பாகற்காய் விலை ரூ. 20 ஆகவும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் ரூ. 29க்கும், தக்காளி கிலோ ரூ. 12 வரையும் விற்கப்படுகிறது.முருங்கைக் காய் விலையும் மிகக் கடுமையாக உள்ளது. கிலோ முருங்கைக்காய் ரூ. 30 வரை கடைகளில் விற்கப்படுகிறது.இப்படி தினசரி பயன்படுத்தப்படும் அதி முக்கிய காய்கறிகளின் விலை மிகக் கடுமையாக இருப்பதால் எதை வாங்குவது, எப்படிச் சாப்பிடுவது என்ற கவலையில் இல்லத்தரசிகள் குழம்பிப் போய் உள்ளனர்.கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடைகளில் விற்பதை விட 5 முதல் பத்து ரூபாய் வரை குறைந்து காணப்படுகிறது. ஆனால் கடைகளில்தான் இஷ்டத்திற்கு வலை வைத்து விற்று வருகின்றனர்.ஆனால் லாரி வாடகை அதிகரித்து விட்டது, சுமை தூக்கும் பணியாளர்களும் கூலியை உயர்த்தி விட்டனர். இதனால் மார்க்கெட்டிலிருந்து கடைகளுக்கு காய்கறிகளைக் கொண்டு வருவதற்கான செலவு அதிகரித்து விட்டது. எனவேதான் மார்க்கெட்டை விட கடைகளில் விலை கூடுதலாக இருப்பதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர்.இருப்பினும் ஒரேயடியாக கடைக்காரர்கள் விலையை உயர்த்தி விற்பது நியாயமற்றது, இதை அரசு உரிய நடவடிக்கை எடுத்துக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.Source: Oneindia

Monday, May 12, 2008

பதிவர் சந்திப்பு முன்னொட்ட அழைப்பு வெளியிட்டதற்கு கீழே கண்டவர்கள் பின்னுட்டமிட்டு தங்கள் வருகையை தெரிவித்துள்ளனர்














மற்றும் நிலா அவர்கள் பதிவில் உள்ளவர்கள்









Thursday, May 8, 2008

ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை!

எனது சேவை இங்கிலாந்திற்கு தேவை இல்லை

இனி நான் அங்கு செல்ல இயலாது.


(வால்பையனும் செல்ல முடியாது ஹைய்யா !!!)


லண்டன்: போதிய ஆங்கில அறிவு இல்லாமல் யாரும் இனிமேல் இங்கிலாந்துக்குச் செல்ல முடியாது. குறிப்பாக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் இங்கிலாந்துக்குள் வர முடியாது என அந்த நாட்டு அரசு தடாலடியாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்குள் வர விரும்புவோருக்கு புதிய சட்ட திட்டங்களை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி போதிய ஆங்கில அறிவு இல்லாவிட்டால் இனிமேல் இங்கிலாந்துக்குள் நுழைய முடியாதாம். இந்தப் புதிய உத்தரவின் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் வெளிநாட்டினரை தடுக்க முடியும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.இந்த புதிய விதிமுறைக்கு சர்வதேச விளையாட்டு வீரர்களும் விதி விலக்கல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் பெரும் பாதிப்படைவார்கள் என்று கருதப்படுகிறது.குறிப்பாக பிரேசில் நாட்டு கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ, அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. எனவே இவர்களால் இங்கிலாந்துக்குள் நுழைவது இயலாத காரியமாகியுள்ளது.

இந்த விதிமுறையை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் இங்கிலாந்து தெளிவுபடுத்தியுள்ளது.சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால்தான் இங்கிலாந்துக்குள் இனி நுழைய முடியும் என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளதால், பல நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பல நட்சத்திர வீரர்கள் தங்களது நாட்டு அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்படலாம் என கருதப்படுகிறது.இந்தப் புதிய விதிமுறையை இங்கிலாந்து நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் லியாம் பைர்ன் நேற்று அறிமுகப்படுத்தினார்.Source: Oneindia

Wednesday, May 7, 2008

என்று தணியும் இந்த மோகம் !! இன்று அட்சய திரிதியை: தங்கத்தை மிஞ்சுமா பிளாட்டினம்?



அட்சய திரிதியை: தங்கத்தை மிஞ்சுமா பிளாட்டினம்?
சென்னை: அட்சய திரிதியை இன்று மற்றும் நாளை (7 மற்றும் 8ம் தேதி) கொண்டாடப்படுகிறது.


இந்தாண்டு அட்சய திரிதியைக்கு பிளாட்டினம் வாங்குவது நல்லது என்று பிரபல ஜோதிடர்கள் கூறியுள்ளதால் அதை வாங்க கூட்டம் அலைமோதலாம் எனத் தெரிகிறது.சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3ம் பிறை தோன்றும் நாள்தான் `அட்சய திரிதியை'. அன்றைய தினம் சந்திரனும், சூரியனும் உச்சம் பெற்றிருப்பதால் காரிய சித்தியும், பொருள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.நகை, வீடு, மனை, வாகனம் போன்றவை இந்த தினத்தில் வாங்குவது விசேஷம். அட்சய திரிதியை தினத்தில் வாங்கும் பொருட்களால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதிலும் தங்கம் வாங்குவது மங்களகரமானது என்பது நம்பிக்கை.

இந்த நாளில்தான் திருமாலின் 6வது அவதாரமாகிய பரசுராமர் அவதரித்ததாகவும், சொர்க்கத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்த தினமாகவும், திரேதா யுகம் தொடங்கியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.தவிர, புதிய தொழில் தொடங்குவது, புதிய வங்கி கணக்குகள் தொடங்குவது போன்றவற்றை இந்த தினத்தில் பலர் மேற்கொள்கின்றனர்.

பிளாட்டினம்-தங்கம் போட்டி:ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் அந்தாண்டுக்கான பூ, விலங்கு, உலோகம், திசை ஒன்றை விசேஷமாக கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு அட்சய திரிதியைக்கு வெண் தங்கம் எனப்படும் பிளாட்டினம் அல்லது வெள்ளி வாங்குவது நல்லது என்று பிரபல ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாகவே பிளாட்டினம் நகைகள் பிரபலமாகி வருகின்றன. இருந்தாலும் பெண்களிடம் தங்கத்துக்கு உள்ள மவுசு பிளாட்டினத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது உண்மை. இதில், எங்களிடம் பிளாட்டினம் நகையும் இருக்கிறது என்று பெருமைக்காக வாங்கி வைத்திருக்கும் பெண்களும் உள்ளனர்.

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts