சினிமா சினிமா - தொடர்பதிவு
என்னை இத்தொடர் பதிவில்
கோர்த்து விட்ட சுபாஷ் என் முதற்க்கண் நன்றியை (நற நற) தெரிவித்துக் கொண்டு பதிவிற்குப் போகலாமா? அனேகமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்
1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
ஒரு வயதில்... அப்போது நன்றாக தூங்கியதாக அம்மா கூறியிருக்கிறார்
ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ஹரிதாஸ்
இ. என்ன உணர்ந்தீர்கள்?
சினிமா என்றால் நிறைய பாட்டு இருக்கும் என உணர்ந்தேன்
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தல நடித்த வரலாறு. நடுஇரவு 1 மணி ரயிலுக்கு டிக்கெட் புக் செய்து இருந்ததால் ஈரோடு ரயில் நிலையம் எதிரில் உள்ள திரையரங்கில் பார்த்தது...
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன
உணர்ந்தீர்கள்?
வேறேங்கே... நமது கணினியில் தான்...அதுதான் சவுகர்யம்...எதுவென்று வேண்டாமே...
சிகரெட் புகையுடன் சுவாசித்துகொண்டு, காறி துப்பபட்டுருக்கும் எச்சிலை மிதித்து நடந்து கொண்டு, வாந்தி எடுக்க வைக்கும் கழிவறை, காட்டுக்கூச்சல் போட்டு ரசிகர் பட்டாளம் தொந்தரவே இல்லை...
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பராசக்தி
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கே மீது கொலை வழக்கு
ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்
அலிபாபாவும் 40 திருடர்களும். முதல் கலர் படம்
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ம்... தினத்தந்தியில்... இப்போது நெல்லை சினிமா நிருபர்
7.தமிழ்ச்சினிமா இசை?
கே.வீ.மகாதேவன்
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்திப்படங்கள்...தமிழ் டப் ஆங்கிலப்படங்கள் (உதவி: சன் & விஜய் டீவி)
பக்த மீரா,
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
படங்களை பார்ப்பது தவிர வேறோன்றும் இல்லை...அதுவும் தற்போதைய நிலைமை மேம்பட உதவாது.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சின்னத்திரை இருக்க தமிழ்சினிமா கவலை கொள்ளவேண்டியது இல்லை
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ் எழுத்தாளர்கள் வளம் பெறுவார்கள்.. நாடகம் உயிர்பெறும்... பதிவர்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்
எனக்கு கோத்துவிடும் சமாச்சரமே பிடிக்கவில்லை.... (ஏனேன்றால் நான் கோத்துவிடுபவர்கள் அதற்கு பதிவே போடுவதில்லை உதாரணம் (A for Apple)
ஆகவே நானும்
அண்ணன் உண்மைத்தமிழன் கட்சியில் சேர்ந்து கோத்துவிட்டவரை கேள்விகள் கேட்கிறேன்.
என்னைக்கோத்துவிட்ட சுபாஷ் அவர்களுக்கு....
கேள்வி:
1) உங்களுடைய பதிவில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் உள்ளனவே?
2) எப்படி நேரம் கேட்ட நேரத்தில் வந்து தனிமையில் கொடூரமாக கும்மி பின்னுட்டம் போட உங்களால் முடிகிறது?
3) தற்போது பதிவுகள் குறையக்காரணம் என்ன? அதிக கும்மிதான் காரணமா?
டிஸ்கி: பதிவர்கள் மன்னிக்கவும்...இந்த சினிமா தொடர்பதிவே பொதுவாக பதிவர்களின் வயதைக்கண்டுபிடிக்கும் முயற்சியோ என சந்தேகித்து இந்த பதிவில் கும்மி போட்டு தாக்கிவிட்டேன். அத்தனையும் உடான்ஸ் தான்