Saturday, October 25, 2008

ஜப்பான் யென்னின் எழுச்சியும் இந்தியா ரூபாயின் வீழ்ச்சியும்

ஜப்பான் யென்னின் எழுச்சியும் இந்தியா ரூபாயின் வீழ்ச்சியும்

நேற்றைய தினம் உலக பங்குசந்தை மார்கேட்டின் கறுப்பு தினம். ஜப்பானில்  ஆரம்பித்து கொரியா, ஆஸ்திரிலேயே, ஹாங்காக், சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான், அரபுநாடுகள், இஸ்ரேல்,  ரஷ்யா,  மற்றும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் அனைத்தும் 5 லிருந்து 15 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

 
(நேற்று நியூயார்க் பங்குசந்தையி்ன் வெளிப்புறம் எடுக்கப்பட்ட படம்)
அதைக்கண்டு பயந்த வெளிநாட்டு முதலீட்டாளார்கள் பங்கு சந்தை விடுத்து தங்களுடை முதலிட்டை அமேரிக்க டாலரில் மற்றும் ஜப்பானிய யென்னிலும் முதலிடு செய்ததால் அவையிரண்டும் அதிக விலை உயர்வை சந்தித்து உள்ளன.

மேலும் ஓபேக் நாடுகள் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் பீப்பாய் அளவு உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. இதன் மாநாட்டிற்கு பின்பு கூட கச்சா எண்ணேய் 5 சதவீதம் குறைந்து நேற்று 64.15 டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.

மேலும் நமது ரூபாயின் மதிப்பு மார்க்கெட்டில் டாலர்க்கு உள்ள டிமாண்ட் காரணமாக ஒரு டாலர் 50 தாண்டி விற்பனையாகி வருகிறது.

இதனால் நமது ஏற்றுமதியாளர்களுக்கும் வெளிநாட்டில் வேலை செய்வோர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் நமது இறக்குமதியாளர்களுக்கு மிகவும் அதிக பட்ச நஷ்டத்தை இந்த வருடத்தில் ஏற்படுத்தும்.
இதில் நமக்கு ஒரு அல்ப சந்தோசம் உள்ளது என்னவென்றால் இதைப்போலவே மற்ற நாடுகளின் நாணயங்களும் கடும் சரிவையே சந்தித்து உள்ளன

மேலும் இந்த விலையேற்றத்தால் கச்சா எண்ணேய் விலை குறைந்தாலும் நமது நாட்டில் விலை அதிகம் கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது எனக்காரணம கூறி நமது அரசு விலைகுறைப்பு செய்யாது எனத்தெரிகிறது.

அப்படியே செய்தாலும் ஒட்டகத்தின் முதுகில் இருந்து எடுத்து போடப்பட்ட ஒரு
மூட்டையை போல 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் தான் இறக்குவார்கள்.

பங்குச்சந்தை இறங்கினால் எப்படி அமெரிக்க டாலரிலும் ஜப்பான் யென்னிலும் முதலீடு செய்து வாங்கி வைக்கிறார்களோ அப்படி இந்திய ரூபாயை வாங்கிவைக்கும் நன்னாள் என்னாளோ ?

இதுசம்பந்தமான ஆங்கலத்தில் விளக்கமான பதிவிற்கு இங்கு செல்லுங்கள்

உங்களுடை கருத்துகளை பின்னுட்டமிடுங்கள்

2 comments:

பழமைபேசி said...

அய்ய, இந்த பதிவு ரொம்ப சூடா இருக்குது. ஆறினவிட்டு வாறேன். கோவிக்கப் படாது. தமிழமணமே சொல்லிடுச்சே?

கூடுதுறை said...

//Blogger பழமைபேசி said...
அய்ய, இந்த பதிவு ரொம்ப சூடா இருக்குது. ஆறினவிட்டு வாறேன். கோவிக்கப் படாது. தமிழமணமே சொல்லிடுச்சே?//

சூடாக இருக்கும்போது சாப்பிட்டாத்தான் ருசியே...ஆறிய பிறகு சப்பென்றாகிவிடும் இல்லயா?

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts