Wednesday, June 25, 2008

அடுத்த ஆண்டில் மகளிர் டுவென்டி- 20 போட்டி

இப்போட்டிகள் பெரும் வெற்றி பெற பதிவர்களின் ஆலோசனைகளை பின்னுட்டமாக தருக்

முதல்முறையாக மகளிருக்கான டுவென்டி- 20 கிரிக்கெட் போட்டிகளை அடுத்த ஆண்டில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் இடையே டுவென்டி- 20 போட்டிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக அண்மையில் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடர் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையடுத்து மகளிர் பிரிவிலும் டுவென்டி- 20 போட்டிகளை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆடவர் தொடருடன், மகளிர் தொடரையும் நடத்த அது தீர்மானித்துள்ளது.

இதன்படி ஆடவர் டுவென்டி- 20 போட்டிகள் லார்ட்ஸ், ஓவல் மற்றும் டிரென்ட்பிரிட்ஜ் மைதானங்களில் நடைபெறும். டான்டன் மைதானத்தில் மகளிர் போட்டிகள் நடத்தப்படும்.

மகளிர் டுவென்டி- 20 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை மற்றும் மேற்கு இந்தியத்தீவு அணிகள் பங்கேற்கும்.

No comments:

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts