Tuesday, July 4, 2017

நமது வளர்ப்பு சரிதானா?

தன்னை அறிதல் 2


வணக்கம்...

நமது வளர்ப்பு எப்படி உள்ளது?

சிறிய வயதில் தாய், தந்தை, தாத்தா, பாட்டி அனைவரும் நம்மிடம் கூறி வருவது என்னவென்றால்....

நன்கு படிக்க வேண்டும்..

நல்ல வேலை/தொழில் செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும்...

நல்ல குடும்பத்தில் பெண் எடுத்து குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்

சொந்த வீடு, பெரிய கார் வாங்க வேண்டும்.

குழந்தைகளை பெரிய படிப்பு படிக்க வைத்து அவர்க்கு பெரிய வேலை வாங்கி கொடுத்து...

பேரன் பேத்திகளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும்....

இவ்வளவு தான்...

இது மட்டும் தான் இந்த மனித பிறவி எடுத்திட்ட நோக்கமா?

ஏன் நமது பெரியவர்கள் கோவிலுக்கு சென்று கடவுள் வழிபாட்டினை தவிர வேறு எதுவும் சொல்லி கொடுப்பதில்லை...?

இதில் அவர்களை சொல்லி குற்றமில்லை அவர்களும் அவர்களுக்கு முன்னோர்கள் அனைவருமே மாயையில் ஆட்பட்டே உள்ளனர்..

இவ்வளவு தான் வாழ்க்கை....

இவ்வாறு வாழ்ந்து இறப்பதுதான் வாழ்க்கையின் முழுமை என அவர்களுது அடி மனதில் ஆழ பதிந்துள்ள விஷயம் ஆகி விட்டது.

அதன்படியே அவர்களும் வாழ்ந்தும் மறைந்தும், அவ்வாறே நம்மையும் செய்ய கூறி பழக்கி விட்டு விட்டனர்.

இதில் ஒரு சிலர் மட்டுமே விதி விலக்காக

நாம் யார்?

நாம் இங்கு எப்படி வந்தோம்?

என யோசனை செய்கின்றனர்.

மேலும் அதை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் பேசினாலோ கேட்டாலோ

உடன் சாமியார், பழம் எனக் கூறி கிண்டல் செய்து தடுக்க பார்க்கின்றனர்.

அதையும் மீறினால் அவன் சாமியார் ஆகிவிடுவான்,

குடும்பத்தை விட்டு போய் விடுவான் எனக் கூறி

மனைவி மக்கள் சொந்தங்களிடம் கூறி

எவ்வாறேனும் அந்த ஆராய்ச்சியில் நுழையாமல் தடுத்து விடுகின்றனர்.


மேலும் மேற்கொண்டு அதற்கு அப்பால் செல்வோருக்கு இந்த சமுதாயம் பெரும் தடையாக உள்ளது.

ஏனெனில் தற்காலம் என்பது மிகவும் சுருங்கி விட்டது

மனிதனில் ஒவ்வொரு செயலிலும் கேளிக்கைகள், ஐம்புலன்களால் அளப்படுகின்ற இந்திரிய சுகங்கள் கொடுக்கின்ற விஷயங்களே நிறைந்து உள்ளன.

அவற்றை வெற்றி கொள்வது மிகவும் பெரும்பாடான விஷயமாகும்...

சற்று சிந்தியுங்கள்....

நாளை தொடரும்....

🌹 நல்லதே நடக்கிறது🌺

Monday, July 3, 2017

மறைக்கப்பட்ட பொக்கிஷம்

தன்னை அறிதல் 1

வணக்கம்...


முதலில் ஒரு கதை

அந்த கோவில் வாசலில் ஒருவன் பிச்சை எடுத்து கொண்டு இருந்தான்.

அவனது சொத்து என்றால் அவனது கையில் இருக்கும் நல்ல கருமை நிற திருவோடு ஒன்றுதான்.

(அவன் இந்த கால  பிச்சைக்காரன் போல் அல்ல)

அன்றன்று விழும் பிச்சை வைத்து சாப்பிட்டு கொள்வான்.

அவனுக்கு வயதாகி விட்டது...சரியாக நடக்கவும் முடியவில்லை.

ஒருதடவை கீழே விழுந்தான் அவனது திருவோடும் எகிறி போய் விழுந்தது....

அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை...ஆனால் திருவோடு உடைந்து விட்டதோ என மிகவும் பயந்து விட்டான்.

ஏனெனில், அது அவனது தாத்தாவிடம் இருந்து தந்தையிடம் இருந்து அவனுக்கு வந்தது.

ஆகவே, எடுத்து திருப்பி திருப்பி பார்த்தான்....

ஓரிரு இடங்களில் காயமும் கீறலும் இருந்தது.

உடன் அருகே இருந்த கடைக்காரரிடம் கொடுக்க அவர் அதை பார்த்து நல்ல வலிமையான உலோகமாக உள்ளது. வேறு யாரேனும் பாத்திரம் செய்பவரிடம் கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள் என கூறினான்.

அவனும் அதற்கு தகுந்தவர் இடம் கொண்டு சேர்க்க அவரும் அதை என்ன உலோகம் என பார்க்க சற்றே உரசி பார்த்தார்.

அதை கண்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.

ஏனெனில், முழுக்க முழுக்க பொன்னால் செய்யப்பட்ட திருவோடு ஆகும்.

ஏனெப்பா, இதை வைத்துக் கொண்டா? மூன்று தலைமுறையாக பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறாய்.. .என்று கேட்டான்...

இதை வைத்து தாம் குடும்பத்தோடு வாழ்வாங்கு வாழ்ந்து இருக்கலாமே எனக் கேட்டார்

இந்த கதையை தாம் ஏற்கனவே படித்தி இருக்கலாம்.

இக்கதையில் வரும் பிச்சைக்காரன் போல் தான்

நாம் அனைவரும் உடல் எனும் தங்க திருவோட்டினை வைத்துக் கொண்டு அதன் அருமை பெருமை தெரியாமல் வாழ்ந்து வருகிறோம்...

நமது மனித உடல் என்பது ஒரு அற்புதமான பொக்கிஷம்...

மேலும் மிகவும் அருமையான இயந்திரம் ஆகும்.

அதை வைத்து நாம் இப்பூவுலகில் எதையும் சாதிக்க இயலும்.

மேலும் மனித நிலையில் இருந்து அடுத்த பரிணாமத்தையும் அடைய இயலும்...

அதை விட்டு நாம் வெந்ததை தின்று இப்பூவுலக ஆசை, மற்றும் தேவைக்காக உழைத்து தேய்ந்து, தேய்ந்து பின் இறந்தும் போகிறோம்...

அதை ஏன் தவிர்க்க முடியாதா? வேறு வழியே இல்லையா?

யோசியுங்கள் .....

நாளை சந்திப்போம்....

🌹 *நல்லதே நடக்கிறது*🌺

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts