Friday, October 31, 2008

தெலுங்கு-கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது...

தெலுங்கு-கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து


டெல்லி: தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் மட்டும் செம்மொழி அந்தஸ்துடன் இருந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்குப் பின் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது.

இதையடுத்து கன்னடத்துக்கும் செம்மொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இந் நிலையில் இன்று தெலுங்கு மற்றும் கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய சுற்றுலா மற்று கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று டெல்லியில் வெளியிட்டார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஆந்திரம், கர்நாடக மாநிலங்கள் உருவான தினமான ராஜ்யோத்சவா தினம் நாளை (நவம்பர் 1) கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணையில் உள்ளது. அந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசு எதி்ர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி. தட்ஸ் தமிழ்

வாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே பாடல் யூட்யூபில்

வாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே பாடல் யூட்யூபில்

வாரணம் ஆயிரம் படத்தில் இடம் பெறும் அடியே கொல்லுதே பாடல் இடம் பெற்றுள்ளது. அதுவும் V TV யில் அப்பாடல் வந்துள்ளது.

பலரும் பார்த்து இருக்கலாம்.

பார்க்கதவர்களுக்கு ஆகவே இப்பதிவு


Tuesday, October 28, 2008

பெட்ரோல் டீசல் விலை குறையும் ?

பெட்ரோல் டீசல் விலை குறையும் ?

உலக அளவில் நிலவி வரும் கடும் பொருளாதார சரிவினால் பெட்ரோலிய பொருட்களுக்கான உபயோகம் பெருமளவில் குறைந்து விட்டது. இதன் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துகொண்டே வருகிறது.

நியூயார்க் சந்தையில் அக்-27 அன்று அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 2.15 டாலர் குறைந்து 62 டாலராகியது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலையும் 2.35 டாலர் குறைந்து 59.70 டாலராகி விட்டது.

ஆயில் விலை குறைந்துகொண்டே வருவதை அடுத்து கவலை அடைந்த எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான் ஓபக், நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தது.

அப்போதாவது ஆயில் விலை உயரும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் 147 டாலர் வரை விலை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் இப்போது 62 டாலர் விலைக்கு வந்துவிட்டது.

இந்த அளவுக்கு விலை குறைந்தால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று இந்திய பெட்ரோலிய அமைச்சர் கூறியிருந்தார். மேலும் கடந்த வாரத்தில் இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் எனவும் கூறியிருந்தார்.

 விரைவில் விலைக்குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

நன்றி. சிஃப்பி

Monday, October 27, 2008

வில்லு படக்காட்சி (exclusive)

வில்லு படக்காட்சி (exclusive)










வில்லை வைத்து எப்படியெல்லாம் அம்பு விடலாம் என்று இப்பெண் செய்து காட்டுகிறார் இந்த வீடியோவில் காணுங்கள்.

நீங்களாகவே வேறு எதையாவது கற்பனை செய்து கொண்டால் நான் அதற்கு பொறுப்பல்ல.

Sunday, October 26, 2008

அமெரிக்காவில் பணிபுரிவோரின் வேலை பறி போகும் அபாயம்

அமெரிக்காவில் பணிபுரிவோரின் வேலை பறி போகும் அபாயம்

அமேரிக்காவில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடி காரணமாக அங்கெ பணி புரியும் சரக்கு, சேவைத்தொழிலில் பணி புரியும் ஆயிரக்கணக்கன பேரின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் கீழேக்கண்ட நிறுவனங்களிலிருந்தும் Merck, Yahoo,
General Electric, Xerox, Pratt & Whitney, Goldman Sachs, Whirlpool, Bank of America, Alcoa, Coca-Cola, இந்தக்கம்பெனிகள் மற்றும் டெட்ராய்டில் உள்ள வாகனத்தயாரிப்பு கம்பெனிகள் கிட்டத்தட்ட அனைத்து ஆகாய விமான நிறுவனங்களும் வேலை நீக்கம் நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுவருகின்றன.

அனேகமாக நவம்பரில் அமேரிக்காவில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

தற்போது அமேரிக்காவில் வேலையில்லாதோரின் 6.1 சதவீதமாக உள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் 8 லிருந்து 8.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இதுசம்பந்தமான விரிவான ஆங்கிலப்பதிவினை இங்கு காணலாம்

Saturday, October 25, 2008

ஃபயர்பாக்சின் புதிய பிரவுசர் beta வெளியீடு

ஃபயர்பாக்சின் புதிய பிரவுசர் beta வெளியீடு


தற்போது நாம் அதிகபட்சமாக இணையத்தில் உலாவியாக பயன்படுத்தி வரும் ஃப்யர்பாக்ஸ் 3.03 உலாவிக்கு போட்டியாக கூகுல் குரோம் என்ற உலாவியை கொண்டு வந்தது கூகுல் நிறுவனம். அது மிகவும் சுலபமாகவும் அதிக வேலைப்பாடு இல்லாமலும் சற்று வேகமாகவும் இயங்கி வந்தது.






ஃப்யர்பாக்ஸ் வெளியீட்டு நிறுவனமான மோஸில்லா (Mozilla) தற்போது மைன்ஃபில்டு (Minefield) என்ற எதிர்கால ஃப்யர்பாக்ஸ் உலாவியக ஆல்பா வெர்சன் ஆக வெளியிட்டுள்ளது.

இது ஃப்யர்பாக்ஸை விட அதிவேகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கூகுல் குரோமை விட 10 சதவீத வேகத்தில் இயங்குகிறது எனக்கூறுகின்றனர்.

மேலும் இது விண்டோஸ்,மேக் ஓஎஸ் எக்ஸ், லினிக்ஸிலும் இயங்கும்படி கொடுத்துள்ளனர். என்ன இப்பொதைக்கு ஃப்யர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்டென்சன்கள் இணைக்க இயலாது.

தேவைப்பட்டால் இதை தனியாக ஒரு இடத்தில் பதிந்து கொள்ளுங்கள் எனக்கூறுகின்றனர்.

மேற்படி உலாவியை இந்தப்பதிவிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

மேலும் இங்கே இது சம்பந்தமான ஆங்கில விளக்கங்களூம் உள்ளன.

ஒரு குறிப்பு இப்பதிவி மேற்படி உலாவியில் இருந்து பதிக்கப்பட்டது.

ஜப்பான் யென்னின் எழுச்சியும் இந்தியா ரூபாயின் வீழ்ச்சியும்

ஜப்பான் யென்னின் எழுச்சியும் இந்தியா ரூபாயின் வீழ்ச்சியும்

நேற்றைய தினம் உலக பங்குசந்தை மார்கேட்டின் கறுப்பு தினம். ஜப்பானில்  ஆரம்பித்து கொரியா, ஆஸ்திரிலேயே, ஹாங்காக், சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான், அரபுநாடுகள், இஸ்ரேல்,  ரஷ்யா,  மற்றும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் அனைத்தும் 5 லிருந்து 15 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

 
(நேற்று நியூயார்க் பங்குசந்தையி்ன் வெளிப்புறம் எடுக்கப்பட்ட படம்)
அதைக்கண்டு பயந்த வெளிநாட்டு முதலீட்டாளார்கள் பங்கு சந்தை விடுத்து தங்களுடை முதலிட்டை அமேரிக்க டாலரில் மற்றும் ஜப்பானிய யென்னிலும் முதலிடு செய்ததால் அவையிரண்டும் அதிக விலை உயர்வை சந்தித்து உள்ளன.

மேலும் ஓபேக் நாடுகள் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் பீப்பாய் அளவு உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. இதன் மாநாட்டிற்கு பின்பு கூட கச்சா எண்ணேய் 5 சதவீதம் குறைந்து நேற்று 64.15 டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.

மேலும் நமது ரூபாயின் மதிப்பு மார்க்கெட்டில் டாலர்க்கு உள்ள டிமாண்ட் காரணமாக ஒரு டாலர் 50 தாண்டி விற்பனையாகி வருகிறது.

இதனால் நமது ஏற்றுமதியாளர்களுக்கும் வெளிநாட்டில் வேலை செய்வோர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் நமது இறக்குமதியாளர்களுக்கு மிகவும் அதிக பட்ச நஷ்டத்தை இந்த வருடத்தில் ஏற்படுத்தும்.
இதில் நமக்கு ஒரு அல்ப சந்தோசம் உள்ளது என்னவென்றால் இதைப்போலவே மற்ற நாடுகளின் நாணயங்களும் கடும் சரிவையே சந்தித்து உள்ளன

மேலும் இந்த விலையேற்றத்தால் கச்சா எண்ணேய் விலை குறைந்தாலும் நமது நாட்டில் விலை அதிகம் கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது எனக்காரணம கூறி நமது அரசு விலைகுறைப்பு செய்யாது எனத்தெரிகிறது.

அப்படியே செய்தாலும் ஒட்டகத்தின் முதுகில் இருந்து எடுத்து போடப்பட்ட ஒரு
மூட்டையை போல 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் தான் இறக்குவார்கள்.

பங்குச்சந்தை இறங்கினால் எப்படி அமெரிக்க டாலரிலும் ஜப்பான் யென்னிலும் முதலீடு செய்து வாங்கி வைக்கிறார்களோ அப்படி இந்திய ரூபாயை வாங்கிவைக்கும் நன்னாள் என்னாளோ ?

இதுசம்பந்தமான ஆங்கலத்தில் விளக்கமான பதிவிற்கு இங்கு செல்லுங்கள்

உங்களுடை கருத்துகளை பின்னுட்டமிடுங்கள்

Thursday, October 23, 2008

உலக பங்குச்சந்தை நிலவரம் காணுங்கள் படங்களில்

உலக பங்குச்சந்தை நிலவரம் காணுங்கள் படங்களில்
இது படங்களாக இருந்தாலும் செய்தியின் முக்கியத்துவத்தை கணக்கில் கொண்டு இந்தப்பதிவினை கூடுதுறையில் வெளியிட்டுள்ளேன்.
காணத்தவறாதீர்கள்
 FRANFURT
  
 INDIA
  
NEW YARK
  
PARIS
  
 LONDON
  
TOKYO
  
 THEN NEXT
  
  




PAKISTAN

Wednesday, October 22, 2008

நீங்கள் இன்னும் புகைபிடிப்பவரா? இதை அவசியம் காணுங்கள்

நீங்கள் இன்னும் புகைபிடிப்பவராக இருந்தால் இந்த வீடியோவை அவசரப்படாமல் ஒரே ஒருமுறை காணுங்கள்.

பிறகு தங்கள் விருப்பம்.

புகை பிடிக்காதவர்களும் இதைப்பார்த்து தங்களின் புகைபிடிக்கும் நண்பர்கள் உற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பார்வர்ட் செய்யுங்கள்.


Tuesday, October 21, 2008

மிகப்பெரிய அளவு கொண்ட படம் - காணத்தவறாதீர்கள்

மிகப்பெரிய அளவு கொண்ட படம் - காணத்தவறாதீர்கள்

இது மிகப்பெரிய அளவு கொண்டபடம் என்பதாலும் சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சண்டைக்கு வருவார்கள் என்பதாலும் இந்த படத்தை இங்கு வெளியிடமால் எனது இந்த ஆங்கில பதிவில் இட்டுள்ளேன். (நன்றி: ஜிம்ஷா காப்பிரைட் உரிமையாளர்)

தமிழில் பின்னுட்டமிடுபவர்கள் இந்தப்பதிவில் பின்னுட்டம் இடுங்கள். ஆங்கில பதிவில் ஆங்கிலத்தில் மட்டுமே பின்னுட்டமிடுங்கள் (யோசனை உதவி: அண்ணன் பதிவுஞானி தமிழ் நெஞ்சம் அவர்கள்)
.

Saturday, October 18, 2008

சீன வானொலியின் இணையப்பக்கம் - தமிழில்

சீன வானொலியின் இணையப்பக்கம் தமிழில்

இன்று எதோ ஒன்றை கூகுலில் தேடிக்கொண்டிருந்த போது (எப்போதுமே அது தானே வேலை) ஒரு தமிழ் இணையப்பக்கம் கிடைத்தது...

அது சீன வானோலியின் தமிழ்மொழி இணையப்பக்கம். அதில் அவர்கள் வெறும் வானோலி விசயங்களை மட்டும் தரவில்லை. சீனாவின் செய்திகள், வெளிநாட்டுச்செய்திகள் மற்றும் செய்தி தொகுப்பு ஆகியவைகளை முகப்பில் கொண்டுள்ளது.

இதன் மூலம் சீனப்பார்வையில் உலகத்தினை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டும் வருகிறது.

மற்றும் வானோலியின் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவாக இணைப்பாக கொண்டுள்ளது. ஆனால் என்ன கஷ்டம் அது rm பைல் பார்மட்டில் உள்ளது. ரியல் பிளேயர் இருந்தால் இயக்கிக்கொள்ளலாம். இல்லையேல் ரியல் பிளேயர் கோல்டுற்க்கான பதிவிறக்க இணைப்பு கொடுக்கபட்டுள்ளது அதில் இறக்கிக்கொள்ளலாம்.

தமிழ் திரைப்பாடல்களின் தொகுப்பும் அதில் உள்ளது. அவற்றையும் தளமிறக்கிக்கொள்ளலாம்.

மேலும் ஒரு முக்கியமான விசயம் சீன மொழியை கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களூக்கு தமிழ் மூலமாக கற்றுக்கொள்ள அதில் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பாடங்கள் ஒலிப்பதிவாகவும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்பபயணக்கட்டுரைகள், பண்பாடும் கதையும்,சமுக வாழ்வு,அறிவியல் உலகம், சீன தேசிய இன குடும்பம், நல வாழ்வு பாதுகாப்பு, விளையாட்டுச்செய்திகள் எனவும் மற்றும் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றிய விசயங்களையும் உள்ளடக்கி ஒரு முழு போர்டலாகவே இயங்கி வருகிறது.

உண்மையில் சீனத்தைப்பற்றி அறிந்து கொள்ள முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

இதோ அதற்கான லின்க் இங்கே.

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பின்னுட்டமிடுங்கள்

Friday, October 17, 2008

சினிமா சினிமா - தொடர்பதிவு

சினிமா சினிமா - தொடர்பதிவு

என்னை இத்தொடர் பதிவில் கோர்த்து விட்ட சுபாஷ்   என் முதற்க்கண் நன்றியை (நற நற) தெரிவித்துக் கொண்டு பதிவிற்குப் போகலாமா? அனேகமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்

1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஒரு வயதில்... அப்போது நன்றாக தூங்கியதாக அம்மா கூறியிருக்கிறார்

ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ஹரிதாஸ்

இ. என்ன உணர்ந்தீர்கள்?

சினிமா என்றால் நிறைய பாட்டு இருக்கும் என உணர்ந்தேன்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தல நடித்த வரலாறு. நடுஇரவு 1 மணி ரயிலுக்கு டிக்கெட் புக் செய்து இருந்ததால் ஈரோடு ரயில் நிலையம் எதிரில் உள்ள திரையரங்கில் பார்த்தது...

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன 
உணர்ந்தீர்கள்?

வேறேங்கே... நமது கணினியில் தான்...அதுதான் சவுகர்யம்...எதுவென்று வேண்டாமே...

சிகரெட் புகையுடன் சுவாசித்துகொண்டு, காறி துப்பபட்டுருக்கும் எச்சிலை மிதித்து நடந்து கொண்டு, வாந்தி எடுக்க வைக்கும் கழிவறை, காட்டுக்கூச்சல் போட்டு ரசிகர் பட்டாளம் தொந்தரவே இல்லை...

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பராசக்தி


5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கே மீது கொலை வழக்கு

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

அலிபாபாவும் 40 திருடர்களும். முதல் கலர் படம்

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ம்... தினத்தந்தியில்... இப்போது நெல்லை சினிமா நிருபர்

7.தமிழ்ச்சினிமா இசை?

கே.வீ.மகாதேவன்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்திப்படங்கள்...தமிழ் டப் ஆங்கிலப்படங்கள் (உதவி: சன் & விஜய் டீவி)

பக்த மீரா,


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

படங்களை பார்ப்பது தவிர வேறோன்றும் இல்லை...அதுவும் தற்போதைய நிலைமை மேம்பட உதவாது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சின்னத்திரை இருக்க தமிழ்சினிமா கவலை கொள்ளவேண்டியது இல்லை

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ் எழுத்தாளர்கள் வளம் பெறுவார்கள்.. நாடகம் உயிர்பெறும்... பதிவர்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்


எனக்கு கோத்துவிடும் சமாச்சரமே பிடிக்கவில்லை.... (ஏனேன்றால் நான் கோத்துவிடுபவர்கள் அதற்கு பதிவே போடுவதில்லை உதாரணம் (A for Apple) 
ஆகவே நானும் அண்ணன் உண்மைத்தமிழன் கட்சியில் சேர்ந்து கோத்துவிட்டவரை கேள்விகள் கேட்கிறேன்.

என்னைக்கோத்துவிட்ட சுபாஷ் அவர்களுக்கு....
கேள்வி:

1) உங்களுடைய பதிவில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் உள்ளனவே?


2) எப்படி நேரம் கேட்ட நேரத்தில் வந்து தனிமையில் கொடூரமாக கும்மி பின்னுட்டம் போட உங்களால் முடிகிறது?


3) தற்போது பதிவுகள் குறையக்காரணம் என்ன? அதிக கும்மிதான் காரணமா?









டிஸ்கி: பதிவர்கள் மன்னிக்கவும்...இந்த சினிமா தொடர்பதிவே பொதுவாக பதிவர்களின் வயதைக்கண்டுபிடிக்கும் முயற்சியோ என சந்தேகித்து இந்த பதிவில் கும்மி போட்டு தாக்கிவிட்டேன். அத்தனையும் உடான்ஸ் தான்

Wednesday, October 8, 2008

இணையத்தில் வலம் வரும்போது போரடிக்கிறதா ? இதைப்படியுங்கள்

ஒரு மனிதனுக்கு எதனால் போரடிக்கிறது?

1. பார்த்த மனிதர்களையே திரும்பத்திரும்பப் பார்ப்பதால்

2. செய்யும் பணியிலே எந்தவிதமான மாறுதலும் இல்லாததால்

3. மிகுதியான ஓய்வுநேரம் - அந்த ஓய்வு நேரத்தை நல்ல பணியிலே செலவு செய்வதில் ஆர்வமின்மை.

4. சோம்பேறித்தனம் - இது இருப்பவர்கள் நிச்சயம் போரடிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள்

5. பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் - தனியே- இருப்பவர்களுக்கு மட்டும்தான் போரடிக்குமா? இல்லை. ஒரு குழுவாக - கூட்டமாக - இருப்பவர்களுக்கும்கூட பல நேரங்களில் போரடிக்கிறதே!

6. காதலுக்காக - காதலி(லன்) வருகைக்காக காத்திருப்பவர்களுக்கும் போரடிக்கிறது

7. போர்க்களத்தில் உயிரைப் பணயம் வைத்து சண்டை போடும் மாவீரனுக்கும்கூட போர் முடிந்தபிறகு வரும் அமைதியைக்கண்டால் போர்தான்.

8. அமைதியை விரும்பி வனம் சென்று தவம் செய்யும் முனிவர்களுக்குப் போரடித்ததால்தானே குட்டிக்குட்டிக் கதைகளாக பஞ்சபாண்டவர்களுக்குச் சொன்னார்கள்.

9. செய்வதற்கு 1000 வேலைகள் இருந்தும், எந்த வேலையும் செய்யத்தோணாமல் மோட்டுவளையைப் பாதுகாப்பவருக்கு மட்டும்தான் போரடிப்பதன் அருமை புரியும்.

10. பரீட்சைத்தாள் விடை திருத்துபவனுக்குப் போரடித்தால் என்ன செய்வான்? "படித்துப் பாராமலேயே - குத்துமதிப்பாக மதிப்பெண் போடுவான்". நன்றாகப் படித்து அருமையாக எழுதிய அறிவழகனுக்கும் 65 சதவீதம்தான். ஒன்றுமே படிக்காமல், ஏனோதானோ என்றெழுதிய ஏகாம்பரத்துக்கும் 65 சதவீதம்தான்.

11. போரடிப்பதிலிருந்து தப்பிப்பதற்காக சுற்றுலாப்பயணம் செய்கிறான் சுரேசு. ஆனால் அவனுக்குப் பேருந்துப்பயணம் போரடிக்கிறது. அவனால் அவனுடைய இருக்கையிலே சும்மா இருக்க முடியவில்லை. முன்பக்கத்திலே கண்டதையும் கிறுக்குகிறான்.

12. அழகான மனைவி - அருமையான வேலை - அறிவான குழந்தை(கள்) - கண்ணெதிரே கடற்கரை - காதை வருடும் மெல்லிசை - மேனியைத் தழுவிச்செல்லும் மெல்லிய தென்றல் - இவையெல்லாம் இருந்தும் அதை அனுபவிக்காதவனுக்கு அடிக்கிறது போர். இவனுமேகூட சில நேரங்களில் 'என்ன வாழ்க்கை என்று' சலித்துக்க்கொள்கிறான்.

13. கோவிலுக்குச் சென்றால் மனநிம்மதி கிடைக்கும் என்று ஆலயதரிசனம் செய்யக்கிளம்புகிறாள் கோகிலா. அவளது நிம்மதி ஆலயத்தின் வாசலிலேயே தொலைகிறது. பிச்சைக்காரர்களின் தொந்தரவால். அவளும் இன்முகத்துடன் சில்லறைகளை அவர்களிடம் தருகிறாள்.திடீரென்று அவள் மனதில் மின்னல் வெட்டு - பிச்சையெடுப்போனின் கிழிந்த உடைகளைக் காண்கிறாள். "தான் அடுத்த சென்மத்திலே இப்படி ஒரு பிச்சைக்காரியாக(காரனாக) - பிறந்துவிடுவோமோ?" எனக் கவலை கொள்கிறாள். இன்று இருக்கும் இனிமையை அனுபவிப்பது மறந்து அடுத்த சென்மத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துக் கவலைப்படுகிறாள். இப்போது சாமிதரிசனமே கோகிலாவுக்கு பெரும் போரடிக்க ஆரம்பிக்கிறது.

14. கைதேர்ந்த மென்பொருளாளன் கணேஷ். அவன் வளைக்கிற வளைப்புக்கு 'கூகுளும்' வளைகிறது. புராஜக்டும் முடிகிறது. பெஞ்சில் இருக்கிறான். அப்போது அவனுக்கும் அடிக்கிறது மிஸ்டர். அன்ட் மிஸ்ஸஸ் போர்.

15. அரசியல்வாதிக்கோ லஞ்சம் வாங்கிவாங்கிப் போரடித்துப்போகி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாமே என்று யோசிக்கிறான். என்ன பலன் அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடுகிறது.

16. ஐந்தாம் வகுப்புக்கான அறிவியலை - 15 வருடமாகத் திரும்பத்திரும்பப் பாடமெடுக்கிறார் ஆசிரியர் 'ஆடியபாதம்'. அவருக்கு அறிவியல் போரடித்தால் என்ன செய்யமுடியும். விதியைத்தான் நொந்துகொள்ள முடியும். ஏன் என்றால் அறிவியல் பாடத்தில்தான் மிதப்பு விதி, நியூட்டன் விதி, பொருண்மை அழியா விதி - எனப் பலப்பல விதிகள் உள்ளன.

17. அது மெதுவாக ஓடிவரும் போட்டி. யார் கடைசியாக மெதுவாக ஓடி வருகிறாரோ அவர்களுக்கே பரிசு கொடுப்பார்கள். நம்ம 'தலை'க்கோ திடீரென்று போரடிக்க ஆரம்பிக்கிறது. என்ன செய்தார்? மடமடவென்று வேகமாக ஓடி முதலில் வந்துவிட்டார்.

18. இராணுவத்தில் இருப்பவனுக்கு துப்பாக்கி சுடாமல் சும்மா இருப்பதென்றால் போர். அவன் என்ன செய்தான்? "தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டான்".

19. கண்டிப்பாக இதைப்படித்த உங்களுக்கும் போரடித்து இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனது போரடித்தல் வியாதியை உங்களுக்குப் பரப்பிவிட்டுவிட்டேன்.

20. இதையும் மீறி உங்களுக்குப் போரடிக்கும்போதெல்லாம் - இந்தக்கட்டுரையை யாருக்காவது ஈ-மெயில் அனுப்பிக்கொண்டே இருங்கள்.

100% சுத்தமான அக்மார்க் மொக்கைப் பதிவு இதுவென ஐ எஸ் ஓ 9002 வாங்குவதற்காகவே எழுதியுள்ளேன். மொக்கைப்பதிவுகளுக்கு என தனியாக விருது வழங்குபவர்கள் இதைப் பரிசீலனை செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.



இந்தப்பதிவு சுத்தமான கலப்படமில்லாத காப்பி பதிவு, கணினி ஞானி திரு தமிழ்நெஞ்சம் அவர்கள் போன வருடப்பதிவில் வந்துள்ளது... நான் படிக்காதது.. என்னைப்போல் பலரும் படிக்காமல் இருப்பார்கள் என்பதால் அவரது அனுமதியின்று வெளியடப்படுகிறது.
எனக்கு எதாவது ஐ.எஸ் ஓ 4501 வது தருவார்களா?

Tuesday, October 7, 2008

ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம்

ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம்




ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு ஒரு கட்டிடம்

துபாயில் ஏற்கனவே புர்ஜ் துபாய் எனப்படும் உலகத்திலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது...

தற்போது அதே துபாயில் ஜபேல் அலி அருகில் ஷாகித் ஜயாத் பாதை அரபுக்கேனலில் சந்திக்கும் இடத்தில் ஒரு கிலோமீட்டர் உயரத்திற்க்கு நகீல் நிறுவனத்தரால் கட்டப்படவுள்ளது. இது புர்ஜ் துபாய் கட்டிடத்தை விட 200 மீட்டர்உயரம் அதிகம்

இதற்க்காக நகீல் நிறுவனம் 270 ஹெக்டே நிலத்தை தயார் செய்துள்ளது. இது கட்டி
முடிக்கப்படும் போது 55000 பேர் குடியுருக்க முடியும்படி கட்டப்படுகிறது.

இது கட்டிமுடித்தபின் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக இருக்கும்.

இக்கட்டிடத்தின் விலை ஒரு சதுரடிக்கு சுமார் 3500 அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சதுரடிக்கு ரூ 1லட்சத்தி 65 ஆயிரம்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைக்கட்டி முடிக்க சுமார் 10 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கின்றனர்

இக்கட்டிட கட்டி முடிக்க 5லட்சம் கன அடி கான்கிரிட் கலவை உபயோகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான வீடியோவை இங்கே பாருங்கள்



Friday, October 3, 2008

ஈ-மெயிலில் வந்த அமெரிக்க டாலர்கள்

ஈ-மெயிலில் வந்த அமெரிக்க டாலர்கள்

இன்று ஒரு ஈ-மெயில் வந்தது. அதில் மெக்ஸிகோ நாட்டில் ஒரு போதை மருந்து வியாபாரியின் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது.

நாம் வீட்டில் துணிமணிகளை அடுக்கி வைக்கும் பீரோ மற்றும் ரேக்குகள் அனைத்திலும் அமெரிக்க டாலர்களை அடுக்கி வைத்து இருந்தார்.

அந்த படங்களை கீழே வெளியிட்டுள்ளேன். படத்திலாவது கண் குளிர பார்ப்போம்

அனேகமாக அந்த பணத்தை வைத்து மெக்ஸிகோவின் கடனை அடைத்துவிடலாம் எனக்கூறிகின்றனர். 

மொத்த தொகை $ 207 மில்லியன் டாலர்கள்









வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts